Saturday, April 19, 2014

நான் சிகப்பு மனிதன்

விஷால் & லக்ஷ்மி மேனன் ஏற்கனவே பாண்டிய நாடு திரைபடத்தின்  மூலம்  ராசியான ஜோடி  ஆகிவிட்டனர். படம் வெளிவருவதற்கு முன்பே இருவருக்கும் காதல், முத்தக்காட்சி, தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை என்று அனைத்துமே இப்படத்திற்கு நல்ல விளம்பரத்தை கொடுத்தது. எனக்கு இந்த படத்தோட trailer  பார்த்த  உடனே  படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. short term memory loss, split personality, multiple personality disorder போன்று இத்திரைப்படத்தில்  Narcolepsy யே தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து உள்ளனர். Trailer ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை திரைப்படம் உண்டாக்கியதா  என்று பார்ப்போம்.
நர்கோலேப்சி வியாதி என்பது நீங்கள் திடிரென்று உணர்சிவசப்பட்டலோ, அதிக சந்தோஷமோ சோகமோ உங்கள தூங்கவைத்துவிடும். கதையின் நாயகனுக்கு இப்படி ஒரு விசித்தரமான வியாதி.

கதை

நான்கு ரௌடிகள் சேர்ந்து ஒரு ரயில்வே அதிகாரியே கொலை செய்கின்றனர். பின் விஷால் தன் நண்பர்களுடன் ஒரு தாதாவிடம் கள்ளத்துப்பாக்கி வாங்குகிறார். விஷால் வீட்டுக்கு வந்த பின்னர் முன்பு நிகழ்தவைகளை நினைக்கிறார். விஷாலுக்கு சிறு வயதில் இருந்தே நர்கோலேப்சி என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்பு கூறியதைப்போலவே அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் உறங்கி விடுவார்.  

உறக்கத்தில் இருப்பினும் அவரால் நடப்பவைகளை  கேட்க முடியும் அதனால் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குகிறார். இந்நோயினால்  அவருக்கு வேலை தர யாரும் விரும்பவில்லை. பின் தன் குறையின் மூலமே அவர் சம்பாதிக்கிறார். தன் ஆசைகளில் ஒன்றான சாலையில் தனியாக செல்லும் பொழுது தூங்கிவிடுகிறார். சாலை ஓரத்தில் இவர் இறந்து விட்டார் என்று கூறி லக்ஷ்மி மேனன்னிடம் பணம் கறந்து விடுகிறார் மயில்சாமி. அதன் பின் ஒரு நாள் தற்செயலாக இருவரும் சந்திக்கையில் இறந்தவரைக் கண்ட அதிர்ச்சியில் லக்ஷ்மி அலறியபடியே மயுங்குகிறார். லக்ஷ்மியின் அலறலைக்கேட்டு விஷால் உறங்கி விடுகிறார்.
இருவரும் காதலிக்கிறார்கள். லக்ஷ்மியின் தந்தை இதற்கு சம்மதிக்க மறுக்கிறார். காரணம் விஷால் உணர்ச்சிவசப்பட்டால் உறங்கிவிடுவார். அவரால் செக்ஸ்ல் ஈடுபட முடியாது. 


லக்ஷ்மி மேனன் ரொம்ப ஆதங்கமா ஏக்கமா சோகமா  விஷாலை பார்த்து கேட்குறாங்க நீ எப்போதாவது தூங்காம இருந்து இருக்கியா? இவரு குளிக்கும் போது தூங்கியது இல்லை என்று சொன்ன  உடனே லக்ஷ்மி விஷாலை நீச்சல் குளத்தில் தள்ளி  காமத்தில் ஒன்றாகி விஷாலையும் நம்மையும் குஷிபபடுத்துது. எல்லாம் சுபமாக இருக்க திடிரென நான்கு பேர் லக்ஷ்மி மேனனை மிகவும் வன்மையான முறையில் விஷால் உறங்கிய நிலையில் இருக்கும்பொழுது கெடுத்து விடுகின்றனர். லக்ஷ்மி மேனன் சுயநினைவை இழந்துவிடுகிறார்.  இதன் பின் விஷால் எப்படி லக்ஷ்மி மேனனை கெடுத்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினார் என்பது மீதி கதை.
அதனை திரை அரங்கிலோ, டோர்றேன்ட் பதிவிரக்கத்தின் மூலமாகவோ அல்லது விரைவில் தொலைகாட்சிகளில் காண்க.



நான் ரசித்தவை


1. நர்கோலேப்சி பற்றி எளிமையாக காட்சி அமைப்புகளில் விளக்கியது. 
2. விஷால் லக்ஷ்மி மேனன் முத்தக்காட்சி விரசமா இல்லாம எடுத்தது.
3. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு தன் காதலை சொல்லும் தருணம்.
4. விஷாலின் இயல்பான நடிப்பு.


பிடிக்காதவை

1. பொருத்தமே இல்லாத பிற்பகுதி. 
2. வில்லன் லக்ஷ்மி மேனனை கெடுத்ததற்கு கூறப்படும் கேவலமான  காரணம்.
3. இனியா கதாபாத்திரம். 
4. வில்லனின் எரிச்சலூட்டும் நடிப்பு. 





முற்பாதிக்காக ஒருமுறை பார்க்கலாம்.

நட்புடன்,
உ.சரவணன் 













No comments:

Post a Comment