Wednesday, April 23, 2014

ஊமை விழிகள் - 1986

தமிழ் சினிமாவில் த்ரில்லர்  படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம். நான் விரும்பி பல முறை பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலில் ஆறாம் வகுப்பு படிக்கையில் சன் தொலைகாட்சியில் பார்த்ததாக நினைவு. இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை.விஜயகாந்த் இந்த படத்துல ரொம்ப மிடுக்கா கம்பீரமான காவல் துறை அதிகாரியாக வருவார். 

கதை


டிஸ்கோ சாந்தியும் அவரது தோழிகளும் ஹோட்டல் சோழா பிக்னிக் வருகின்றனர். நள்ளிரவில் டிஸ்கோ சாந்தி கடற்கரை ஓரமாக ராத்திரி நேரத்து  பூஜை பாடலுக்கு தன் தோழிகளுடன் கவர்ச்சி நாடனும் ஆடி நம்மை சூடேற்றுகிறார். 

பின் சாந்தி ஹோட்டல் அறைக்கு போவதரியாது இருக்கையில் வழியில் உள்ள மணியினை அடிக்கிறார். இவர் மணி அடித்த அடுத்த நொடியில் அச்சத்தத்தை கேட்டு குதிரைகள் இரண்டும் தன் கால்களை தரையில் தட்டிக்கொண்டு தயார் ஆனவுடன் அதை எடுத்துக்கொண்டு ரவிச்சந்திரன் மணி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார். இவர் வருவதை கண்டவுடன் சாந்தி மிகவும் பயந்து பின் தன்னை காத்து கொள்வதற்காக ஓடுகிறார். அப்பொழுது ரவிச்சந்திரன் அந்த கவர்ச்சி மங்கையின் கூந்தலை பிடித்து இழுத்து சென்று விடுகிறார். 

மறுநாள் தினமுரசு  பத்திரிக்கையாளர் சந்திரசேகர் சோழ ஹோட்டலின்  மர்மங்களை கண்டறிய செல்கிறார். அவர் செல்லும் வழியினில் கிழவியேய்  பார்த்தவுடன் அவர்களை  புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 
அவ்விடத்தில் சர்ச் பாதர்  பீட்டர் என்பவரை அணுகி அவரிடம் சோழா பிக்னிக் தொடர் கொலைகளை பற்றி விசாரிக்கிறார். அனால் அந்நேரம் ரவிச்சந்திரனின் சகோதரன் வந்தவுடன் இவர் அவ்விடத்தை விட்டு செல்கிறார்.

சந்திரசேகர் தான் சேகாரித்த தகவல்களையும் புகைப்படங்களையும் தினமுரசு நாளிழதலின் தலைமை ஆசிரியர் ஜெய்ஷங்கரிடம் தெரிவிக்கிறார்.சந்திரசேகரின் காதலி அமைச்சர் மலேசியா வாசுதேவனிடம் வேலை செய்கிறார். இந்தகொலைகளில் அமைச்சருக்கும் பங்கு  உண்டு. அவள் மூலமாகவே சந்திரசேகர் அனைத்து ஆதரங்களையும் சேகரித்தார். ரவிச்சந்திரனின் மூலம் தங்கள் ரகசியங்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த  சந்திரசேகரின் காதலியை அவர் முன்  கொலை செய்கின்றனர். இந்த கொலையை கண்டுபிடிப்பதற்காக  விஜயகாந்த் வருகிறார்.

இந்நிலையில் சோழா  ஹோட்டலின் ஆபத்துகளை பற்றி தெரியாமல் கார்த்திக்கும் சசிகலாவும் தேனிலவிற்கு அங்கு செல்கின்றனர். இவர்களைக்கண்ட அந்த கிழவி மணியை அடித்து ரவிசந்திரனுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ரவிசந்திரன் தனது குதிரை வண்டியில் அவர்கள் இருந்த ஹோட்டல் அறைக்கு சென்று கார்த்திக்கை தாக்கி விட்டு சசிகலாவை தொடுகையில் அவள் விழித்து கொண்டு மாடியில் இருந்து தப்பித்து சாலையே நோக்கி ஓடுகிறாள். சாலையில் அரைகுறை ஆடையுடன் கார்களில் செல்பவர்களிடம் உதவி கேட்கிறாள். ரவிசந்திரன் இவளை நெருங்கும் நேரத்தில் சாலையில் செல்லும் ஒருவர் சசிகலாவை தன்  காரில் ஏற்றி பாதுகாத்து அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விடுகிறார்.அமைச்சரின் அடியாட்கள் ஜெய்ஷங்கரின் பத்திரிக்கை அச்சகத்தையும் பணிபுரிபவர்களையும் தாக்குகின்றனர். பின்  சசிகலாவை மருத்துவமனையில் தேடிவரும் பொழுது சந்திரசேகர் அவர்களிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி விஜயகாந்திடம் கொண்டு சேர்த்து விட்டு இறந்துவிடுகிறார்.

விஜயகாந்த் வீட்டில் இல்லாத நேரத்தில் சசிகலாவை கொலைசெய்ய வருகின்றனர். அவளை விஜயகாந்தின் மனைவி சரிதா காப்பாற்றி விட்டு இறந்து விடுகிறார். விஜயகாந்த், ஜெய்ஷங்கர், அருண் பாண்டியன் மூவரும் சோழா பிக்னிக் செல்கின்றனர். கார்த்திக் அங்கிருந்து தப்பித்து இவர்களோடு இணைந்து ரவிசந்திரனை பிடிக்க முயற்சி செய்கிறார். ரவிச்சந்திரன் இவர்களை சங்கிலியால் கட்டிவிட்டு பெண்களை கொள்ளும் காரங்களை கூறுகிறார். அவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்ததாகவும் அவள் இவரை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனுடன் சென்று விட்டாலும் அவளது கண்கள் தினமும் மறக்கமுடியாமல் அன்றிலிருந்து பெண்களின் கண்களுக்காக அவர்களை  பிடித்து கொலை செய்கிறேன் என்று கூறுகிறார். 

விஜயகாந்த் இவர்களை அவனிடம் காப்பாற்றி அவர்களை கைது செய்கிறார். கார்த்திக்கும் சசிகலாவும் மீண்டும் இணைந்து செல்கிறனர்.

சிறப்புகள்:

1. இதுவே திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் திரைப்படம்.
2. தொய்வு இல்லாத திரைக்கதை.
3. பாடல்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு அமைத்தது.
4. விஜயகாந்தின் அற்புதமான நடிப்பு. 
5. பயத்தை வரவைக்க கூடிய அந்த கிழவியின் திகில் கலந்த பார்வை.
6. "பேசாத விழிகள் ஊமை விழிகள்" வசனம் இன்றும் நினைவில் இருகின்றது.

முற்றும்.

நட்புடன் ,
உ.சரவணன்





Saturday, April 19, 2014

நான் சிகப்பு மனிதன்

விஷால் & லக்ஷ்மி மேனன் ஏற்கனவே பாண்டிய நாடு திரைபடத்தின்  மூலம்  ராசியான ஜோடி  ஆகிவிட்டனர். படம் வெளிவருவதற்கு முன்பே இருவருக்கும் காதல், முத்தக்காட்சி, தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை என்று அனைத்துமே இப்படத்திற்கு நல்ல விளம்பரத்தை கொடுத்தது. எனக்கு இந்த படத்தோட trailer  பார்த்த  உடனே  படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. short term memory loss, split personality, multiple personality disorder போன்று இத்திரைப்படத்தில்  Narcolepsy யே தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து உள்ளனர். Trailer ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை திரைப்படம் உண்டாக்கியதா  என்று பார்ப்போம்.
நர்கோலேப்சி வியாதி என்பது நீங்கள் திடிரென்று உணர்சிவசப்பட்டலோ, அதிக சந்தோஷமோ சோகமோ உங்கள தூங்கவைத்துவிடும். கதையின் நாயகனுக்கு இப்படி ஒரு விசித்தரமான வியாதி.

கதை

நான்கு ரௌடிகள் சேர்ந்து ஒரு ரயில்வே அதிகாரியே கொலை செய்கின்றனர். பின் விஷால் தன் நண்பர்களுடன் ஒரு தாதாவிடம் கள்ளத்துப்பாக்கி வாங்குகிறார். விஷால் வீட்டுக்கு வந்த பின்னர் முன்பு நிகழ்தவைகளை நினைக்கிறார். விஷாலுக்கு சிறு வயதில் இருந்தே நர்கோலேப்சி என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்பு கூறியதைப்போலவே அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் உறங்கி விடுவார்.  

உறக்கத்தில் இருப்பினும் அவரால் நடப்பவைகளை  கேட்க முடியும் அதனால் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குகிறார். இந்நோயினால்  அவருக்கு வேலை தர யாரும் விரும்பவில்லை. பின் தன் குறையின் மூலமே அவர் சம்பாதிக்கிறார். தன் ஆசைகளில் ஒன்றான சாலையில் தனியாக செல்லும் பொழுது தூங்கிவிடுகிறார். சாலை ஓரத்தில் இவர் இறந்து விட்டார் என்று கூறி லக்ஷ்மி மேனன்னிடம் பணம் கறந்து விடுகிறார் மயில்சாமி. அதன் பின் ஒரு நாள் தற்செயலாக இருவரும் சந்திக்கையில் இறந்தவரைக் கண்ட அதிர்ச்சியில் லக்ஷ்மி அலறியபடியே மயுங்குகிறார். லக்ஷ்மியின் அலறலைக்கேட்டு விஷால் உறங்கி விடுகிறார்.
இருவரும் காதலிக்கிறார்கள். லக்ஷ்மியின் தந்தை இதற்கு சம்மதிக்க மறுக்கிறார். காரணம் விஷால் உணர்ச்சிவசப்பட்டால் உறங்கிவிடுவார். அவரால் செக்ஸ்ல் ஈடுபட முடியாது. 


லக்ஷ்மி மேனன் ரொம்ப ஆதங்கமா ஏக்கமா சோகமா  விஷாலை பார்த்து கேட்குறாங்க நீ எப்போதாவது தூங்காம இருந்து இருக்கியா? இவரு குளிக்கும் போது தூங்கியது இல்லை என்று சொன்ன  உடனே லக்ஷ்மி விஷாலை நீச்சல் குளத்தில் தள்ளி  காமத்தில் ஒன்றாகி விஷாலையும் நம்மையும் குஷிபபடுத்துது. எல்லாம் சுபமாக இருக்க திடிரென நான்கு பேர் லக்ஷ்மி மேனனை மிகவும் வன்மையான முறையில் விஷால் உறங்கிய நிலையில் இருக்கும்பொழுது கெடுத்து விடுகின்றனர். லக்ஷ்மி மேனன் சுயநினைவை இழந்துவிடுகிறார்.  இதன் பின் விஷால் எப்படி லக்ஷ்மி மேனனை கெடுத்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினார் என்பது மீதி கதை.
அதனை திரை அரங்கிலோ, டோர்றேன்ட் பதிவிரக்கத்தின் மூலமாகவோ அல்லது விரைவில் தொலைகாட்சிகளில் காண்க.



நான் ரசித்தவை


1. நர்கோலேப்சி பற்றி எளிமையாக காட்சி அமைப்புகளில் விளக்கியது. 
2. விஷால் லக்ஷ்மி மேனன் முத்தக்காட்சி விரசமா இல்லாம எடுத்தது.
3. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு தன் காதலை சொல்லும் தருணம்.
4. விஷாலின் இயல்பான நடிப்பு.


பிடிக்காதவை

1. பொருத்தமே இல்லாத பிற்பகுதி. 
2. வில்லன் லக்ஷ்மி மேனனை கெடுத்ததற்கு கூறப்படும் கேவலமான  காரணம்.
3. இனியா கதாபாத்திரம். 
4. வில்லனின் எரிச்சலூட்டும் நடிப்பு. 





முற்பாதிக்காக ஒருமுறை பார்க்கலாம்.

நட்புடன்,
உ.சரவணன்